வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலந்தான்
புள்ளி வைத்து புள்ளி போட்டான்
புது கோலம்தான்
சொல்லித்தர சொல்லி கேட்டு தினமும் சிந்து பாடினான்
வள்ளி இன்ப வள்ளி என்று தினமும் முல்லைச்சரம் கொண்டு சூடினான்
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலந்தான்
சொல்லால் சொல்லாதது
காதல் சுகம் சொல்லில் நில்லாதது
கண்ணால் உண்டானது
கைகள் தொட இந்நாள் ஒன்றானது
வண்ணப்பூ வஞ்சிப்பூ வாய்வெடித்த வாசப்பூ
அன்புத்த்தேன் இன்பத்தேன் கொட்டுமா
இந்தப்பூ சின்னப்பூ கன்னிப்போகும்கன்னிப்பூ
வண்டுதான் வந்துதான் தட்டுமா
என்னை மீண்டும் கொஞ்சத் தூண்டும்
நாணல் போல தேகம் தன்னில் நாணம் என்னம்மா
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலந்தான்
செந்தழ் புல்லாங்குழல் வாண்டியதை ஏந்தும் மன்னன் விரல்
மன்னன் சொல்லும் கவி மங்கைக்கது காதல் நீலாம்பரி
அம்மம்மா அப்பப்பா இன்பம் தரும் பானங்கள்
இன்றைக்கும் என்றைக்கும் தித்திக்கும்
மங்கை நீ கங்கை நீ வெண்ணிலவின் கங்கை நீ
உன்னைத்தான் என் கண்கள் சந்திக்கும்
எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன்
உன்னையின்றி வேறு இங்கு யாரும் இல்லையே
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலந்தான்